Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்; இந்த வாரத்துக்குள் அறிவிக்கலாம்

.

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை இரவு, பகலாக தேடி வருகிறோம். இந்த வரத்துக்குள் அந்த வேட்பாளரை தெரிவு செய்து விடுவோமென தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். நகரில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர், மேற்கண்டாவாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும். தெரிவித்ததாவது:

தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தபடுவது ரணிலுக்கோ, சஜித்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஆதரவை வழங்வதற்காக அல்ல.மாறாக ரணிலுக்காக என்று கூறுவதும் முற்றிலும் தவறானது.

தமிழ் மக்களின் எதிர்காலத்துக்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

பொது வேட்பாளர் தேர்வில் பலரது பெயர்கள் இருக்கின்றன. அதில் ஒருவரை தேர்வு செய்வதென்றால் மாறி, மாறி குற்றசாட்டுச் சுமத்தும் நிலைமையே ஏற்படுகிறது.ஏதாவது ஒரு விதத்தில் தாமே,பொது வேட்பாளராக வர வேண்டுமென சிந்திப்பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் மிடுக்கோடு பேசுபவர்களாக உள்ள நிலைமையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.எனினும்,இந்த வாரத்துக்குள் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து விடுவோம்.

இந்த பொது வேட்பாளர் விவகாரத்தை கைவிடச் சொல்லி தூதரகங்களின் அழுத்தம் ஏதும் இல்லை. இந்திய தரப்பின் அழுத்தங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது.தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டாமென வேறு அழுத்தங்களும் வரவில்லை. ஆனால் சிங்கள வேட்பாளர்களிடைய ஒருவிதமான அச்சமும், பயமும், அருவருப்பும் வந்திருப்பதாக தெரிகிறது என்றார்.