Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமையே கட்சி பிளவுபடுவதற்கு முக்கிய காரணம்.

.

ஆட்சியை கைப்பற்றுவதற்காக, கொள்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமை தம்முடைய கட்சி பிளவுபடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து தயார்ப்படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான் தேசிய பட்டியலின் ஊடாக போட்டியிடவுள்ளேன். கட்சி என்ற வகையில் எம்முடைய வேட்பாளர்களை வெற்றியடையச்செய்வது என்னுடைய கடமையாகும்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமை எம்முடைய கட்சி பிளவு படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆனால் அப்போதும் நாம் நாட்டுக்காக எடுக்க வேண்டிய முடிவை சிறந்த முறையில் எடுத்தோம். நாட்டில் அரசியல் இஸ்தர தன்மையை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.

ராஜபக்ஷர்களின் அரசியல் பயணம் நிறைவடையப்போகின்றதா? இல்லையா என்ற விடயத்தை மக்களே தீர்மானிப்பர். நாம் இதற்கு முன்னரும் கூட தோல்வி அடைந்திருக்கின்றோம். மொட்டுக்கட்சி சார்பாக தற்போது புதிய தரப்பினரே களமிறக்கப்பட்டுள்ளனர். ஆட்சியை கைப்பற்றுவதற்காக நாம் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.