Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ராஜபக்சர் வீட்டில் நடந்த சண்டை; கன்னத்தில் அறை வாங்கியது யார் தெரியுமா?

.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் தினம் தினம் கருத்து முரண்பாடுகளும், கைகலப்புகளும் முற்றி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கட்சிக்குள் பல்வேறு முரண்பாடுகள் முற்றியுள்ளன. கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் கட்சிக்குள் உருவாகியுள்ளன.

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குஇடையில் பொது இடங்கள் மற்றும் கட்சியின் சந்திப்புகளில் கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவில் உள்ள ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேபோன்று மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றும் உள்ளன.

பொதுஜன பெரமுனவுக்கு ராஜபக்சர்களுக்கு சார்பாகவும் ரணிலுக்கு சார்பாகவும் இரண்டு அணிகள் தோன்றியுள்ளதால் இவ்வாறு அடிக்கடி கருத்து மோதல்களும் லைகலப்புகளும் உருவாகுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.