Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ரஷ்ய – உக்ரைன் போரில் 100க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் கூலிக்கு போரிட்டு வருவதாகவும், இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிரங்கா இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் – ரஷ்ய போர் களத்தில் 100க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர்.

ரஷ்ய – உக்ரைன் போரில் 100க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் போரிட்டு வருவதாகவும், இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 54 சிறிலங்கா இராணுவத்தினர் உக்ரைனுக்காகவும் 60 பேர் ரஷ்ய தரப்பிலும் போரிட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வாளர்கள் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், 1000க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய-உக்ரைன் போரில் பல ஓய்வுபெற்ற இலங்கை படையினர் மனித கடத்தல்காரர்கள் ஊடாக, கூலிப்படை குழுக்களின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

“கணிசமான எண்ணிக்கையிலான போர் வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷ்ய-உக்ரைன் போர் முனையில் இலங்கையர்களின் உயிரிழப்புகள் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் முயற்சித்து வருகின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இத்தகைய சட்டவிரோத மனிதக் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடரிபில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.