Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பொது வேட்பாளராக களமிறங்க ரணில் திட்டம்?: மகிந்த கட்சியின் நிலைப்பாடு.

.

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அடுத்த மாதம் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளராக பலரின் பெயர்கள் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளதாக வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் 6 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நாடாளுமன்ற பின்வரிசை உறுப்பினர்களுக்கான நிகழ்வின் போதே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறுபான்மை கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டியிருப்பதால், தான் நிச்சயமாக பொது வேட்பாளராக போட்டியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு – 3, மலர் வீதியில் தனது அரசியல் கட்சி அலுவலகத்தை ஜூன் ஆறாம் திகதி திறந்து வைத்துள்ளார்.

எவ்வாறாயினும், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான கால்பகுதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.