Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்ததில் 77 பேர் உயிரிழப்பு!

,

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் ஒன்று வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (18) வட மத்திய நைஜர் மாநிலத்தின் சுலேஜாவில் பவுசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி எரிபொருள் கசிவு ஏற்பட்டது.

மக்கள் எரிபொருளை சேரிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அது வெடித்தது.

இதன்போது எரிபொருள் சேகரிக்க சென்ற மக்கள் உயிரிழந்தனர் மற்றும் மீட்பு பணியாளர்கள் உட்பட 25 பேர் காயமடைந்ததாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவசர மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் அண்மைய மாதங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, எண்ணெய் வளம் மிக்க டெல்டா மாநிலத்தில் விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசர் வெடித்ததில் குறைந்தது ஐந்து பேர் பலியாகினர்.

மேலும் ஒக்டோபரில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க முயன்றபோது எரிபொருள் பவுசர் வெடித்ததில் குறைந்தது 153 பேர் உயிரிழந்தமையும் குறிப்படத்தக்கது.