மாண்பு கொண்ட மனிதனேயம்! - தமிழ்ப் பற்றாளர்கள் தம்மை தீயினில் ஆகுதியாக்கி நாட்டுப்பற்றாளரகினர்.
நாட்டுப்பற்றாளரகினர்நாட்டுப்பற்றாளர்களுக்கு தலைவணங்கும் தமிழர்தேசம்,

மாண்பு கொண்ட மனிதனேயம், தமிழ்ப் பற்றாளர்கள் தம்மை தீயினில் ஆகுதியாக்கி நாட்டுப்பற்றாளரகினர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46), சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயில் அருகே ஏப்ரல் 17, 2009 இரவு இலங்கையில், இராணுவத்தின் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு தன் மீது மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் சிவானந்தனை, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
ஈழத்தமிழர்களை காக்கக் கோரி பண்ருட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 43). ஏப்ரல்23, 2009 அன்று கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு இரு மகன் மற்றும், மனைவி உள்ளனர். இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்ததுள்ளார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.