டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தர்க்கம் செய்த முன்னாள் நபர் மீது தேவானந்தாவின் கூலிபடை கோர தாக்குதல்!
இதனால் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 02 மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தா மீது அப்பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
ஊர்க்காவல் துறை கரம்பன் பகுதியில் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினரான நபர் ஒருவர் சில கருத்துக்களைக் கேட்டு டக்ளஸ் தேவானந்தாவோடு தர்க்கத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் முன் அவரது தர்க்கத்துக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய டக்ளஸ் தேவானந்தாவின் நிலைமையைக் கண்டு அவரது அடியாட்கள் அந்த முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினரை அவ்விடத்தில் இருந்து அகற்ற முற்பட்டுள்ளனர்.
பல சிரமங்களுக்குப் பின்னர் அவரை அந்த இடத்திலிருந்து நகர்த்திய பின்னர், டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் பரப்புரை நிறைவுற்ற கையோடு பழைய கிழவி கதவைத் திறவாடி என்பது போல் அதே வேகத்தில் அதே பாணியில் வானில் சென்று அவரது வீட்டில் அவரை கோரமாக தாக்கி சென்றுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
என் பி பி அரசும் இதுக்கு ஆதரவு வழங்குகின்றதா? ஆளுகின்ற சிங்கள கட்சிகளோடு, அதிகாரம் உள்ள சிங்கள கட்சிகளோடு சேர்ந்து தமிழ் மக்கள் மீது பலவிதமான தீவிரவாத செயல்களை, தாக்குதலை டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டது தெரிந்ததே.
அவருடைய அணியில் இருந்தவரே அதை தட்டிக் கேட்கின்ற போது பதில் கூற முடியாத டக்ளஸ் தேவானந்தாவின் கண் அசைவுக்கு அவருடைய அடியாட்கள் அடிபணிந்துள்ளனர்.
காலம் காலமாக தமிழினத்தின் மீது இவ்வாறான ஒட்டுக் குழுக்கள் மூலமாகவே ஓட்டுக்களை பிரிப்பதும் ஒடுக்குவதுமான செயல்கள் நடந்து வருகின்றது.