Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முஸ்லிம்கள் அண்ணன் சம்பந்தன் மீது கொண்டிருக்கின்ற வாஞ்சை அளவிட முடியாதது – ரவூப் ஹக்கீம்

மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போது.

முஸ்லிம்கள் அண்ணன் சம்பந்தன் மீது கொண்டிருக்கின்ற வாஞ்சை அளவிட முடியாதது. முஸ்லிம்களையும் அரவணைத்த ஒரு தீர்வு வடக்கு, கிழக்கில் வரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் தானைத்தளபதி சம்பந்தன் மூத்த அண்ணனாக, வழிகாட்டியாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ்த் தேசியப் பரப்பின் ஆலமரமாக இன விடுதலைக்காக சிம்ம சொப்பணமாக ஒலித்த குரல் நித்தியமாக ஓய்ந்துள்ளது.

அவரது அரசியல் வாழ்க்கையின் சாதனைகளைப் பற்றி நீண்ட நெடிய உரையாற்றுகின்ற நேரம் இதுவல்ல. தமிழின் விடுலைக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டாலும், நில அபகரிப்புக்களுக்கு எதிராக கர்ஜித்த குரல் நிரந்தரமாக மௌனித்துவிட்டாலும் அந்த அண்ணாருக்கு செலுத்துகின்ற அஞ்சலி எதுவாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் சிந்திப்பதுதான் தலையாய கடமையாகவுள்ளது என்று கருதுகின்றேன்.

குறிப்பாக தமிழ் பேசும் தரப்பினருக்குள் காணப்படுகின்ற ஒற்றுமையை குலைத்துவிடாது பாதுகாப்பதுதான் அன்னாருக்கு செலுத்துகின்ற பாரிய அஞ்சலியாக இருக்கும் என்பது தான் எனது தாழ்மையான கருத்தாகும்.

முஸ்லிம்கள் அண்ணன் சம்பந்தன் மீது கொண்டிருக்கின்ற வாஞ்சை என்பது அளவிட முடியாதது. முஸ்லிம்களையும் அரவணைத்த ஒரு தீர்வு வடக்கு, கிழக்கில் வரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கு எதிராக சலசலப்புக்கள் அவ்வப்போது எழுந்தபோது அதற்கு எதிராக தயங்காது சலனமில்லாது குரல் கொடுத்தார் என்றார்.