Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 67 வீதம் நிறைவு

.

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 67 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நடைபெறும் என தபால் மாஅதிபர் S.R.W.M.R.P சத்குமார தெரிவித்தார்.

17 தசம் 1 மில்லியன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து தமக்கு கிடைத்திருப்பதாக தபால் மாஅதிபர் கூறினார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இதுவரை 11.4 மில்லியன் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

உத்தியோகபூர்வ  வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நாளை மறுதினம் வரை காலஅவகாசம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நிலவும் மழையுடனான வானிலையால் சிரமங்கள் ஏற்பட்ட ​போதிலும்  அனைத்து உத்தியோகபூர்வ  வாக்காளர் அட்டைகளையும் விநியோகிக்க அதிகபட்ச முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் S.R.W.M.R.P சத்குமார குறிப்பிட்டார்.

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும்போது அதனை கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளுமாறும்  அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படாத வாக்காளர் அட்டைகள் தபால் அலுவலகங்களில் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

07 திகதி முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை தபாலகங்களில் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தபால் மாஅதிபர் தெரிவித்தார்.