Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஆட்டம் ஆரம்பம்! கேத்தா போல் ரணிலுக்கு எதிராகராகவும் போராளிகள் குழு ஆட்டத்தை ஆரம்பித்தது.

போராட்டங்களை முன்னின்று நடத்திய பல தரப்பினர் ஒன்றிணைந்து புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர்.

கோட்டாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராளிகள் குழு; ரணிலுக்கு எதிராக அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

இலங்கைத் தீவில் இடம்பெற்ற கடுமையான போராட்டங்கள் காரணமாகவே ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டடிருந்தார் கோட்டாபய.

கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்ற காலிமுகத்திடலை மையப்படுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த போராட்டங்களை முன்னின்று நடத்திய பல தரப்பினர் ஒன்றிணைந்து புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர்.

‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினருமான வசந்த முதலிகே, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் செயலாளர் லஹிரு வீரசேகர,

மக்கள் பேரவைக்கான அமைப்பின் சட்டத்தரணி நுவான் போபகே, ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர உட்பட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கைகோர்த்துள்ளனர்.

அத்துடன், முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, சோசலிச மக்கள் கூட்டமைப்பும் கூட்டணியில் இணைந்துள்ளன.

இந்த கூட்டணி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களை நாடு முழுவதும் திட்டமிட்டுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல்களையும் நடத்த உள்ளனர்.

ரணிலை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாது தடுக்கும் வகையில் இந்த கூட்டணியின் நகர்வுகள் இருக்கும் என தெரியவருகிறது.