Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

‘இலங்கை ஒன்றிணைய வேண்டும்’: ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமர் மோடி கடிதம்.

.

 

சர்வதேச யோகா தினத்தை ஊக்குவிக்க இலங்கை ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், உலகளாவிய கலாச்சார நாட்காட்டியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்மொழிவாக தொடங்கப்பட்ட சர்வதேச யோகா தினம், கடந்த பத்தாண்டுகளில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் உலகளாவிய இயக்கமாக வளர்ந்துள்ளது.

பண்டைய இந்திய பாரம்பரியமான யோகாவை இன்று உலகின் அனைத்து கலாச்சாரங்களை கொண்ட நாடுகள் மற்றும் கண்டங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மக்கள் மத்தியில் யோகாவை ஊக்குவிப்பதுடன், இந்த வருடமும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவை எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் தனது கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.