Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

துணை முதலமைச்சர் ஆகின்றார் உதயநிதி: திமுகவில் பலரின் பதவிகளை பறிக்க திட்டம்

.

 

துணை முதலமைச்சர் ஆகின்றார் உதயநிதி: திமுகவில் பலரின் பதவிகளை பறிக்க திட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் இறுதி வாரத்தில் அமெரிக்கா செல்லும் தமிழக முதலமைச்சர், அங்கு நீண்ட நாட்கள் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், உதயநிதியை உடனடியான துணை முதலமைச்சராக்க, ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

எனினும், சனாதனம் தொடர்பான வழக்குகளில், சட்ட ரீதியான சில நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருந்ததால், துணை முதல்வர் பதவியை தர கட்சி தலைமை முன்வரவில்லை.

இதனிடையே, அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தந்த தொகுதிகளில் திமுகவிற்கு ஓட்டு சதவீதம் குறைந்திருந்ததோ அந்தந்த தொகுதிகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் கட்சி தலைமை ஆலோசித்துள்ளது.

மேலும், சில மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்பட்சத்தில், அவர்கள் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் சிலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால், அவர்களிடம் இருந்து பொறுப்புகளைப் பறித்து, உதயநிதியின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படும் அமைச்சர்களிடம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்கவும், அமைச்சர்கள் மற்றும் இலாகாக்களை மாற்றம் திமுக தலைமை முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகின்றது.