Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சம்ரான்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

.

ஈரானின் துணை ராணுவ புரட்சி காவல்படையால் உருவாக்கப்பட்ட ‘சம்ரான்-1’ செயற்கைக்கோள், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.

மொத்தம் 60 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தற்போது பூமியில் இருந்து 550 கி.மீ. உயர சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் திட எரிபொருளால் இயக்கப்படும் ‘கயீம்-100’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

விண்வெளி வன்பொருள் மற்றும் மென்பொருளைச் சோதிப்பதே இந்த செயற்கைக்கோளின் முக்கியப் பணி என்றும், செயற்கைக்கோளில் இருந்து தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு சிக்னல் பெறப்பட்டதாகவும் ஐ.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.

ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அடுத்த அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஈரானில் இருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.