Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பங்களாதேஷில் அதிகரிக்கும் பாம்புக் கடி! : சுகாதாரத்துறை விரைவு நடவடிக்கை?

.

 

பங்களாதேஷில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள், நாடு முழுவதும் பாம்புக் கடிகளின் அதிகரிப்பு பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு, விஷ எதிர்ப்பு மருந்துகளை சேமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டாடொக்டர் சமந்தா லால் சென், பாம்பு கடித்தால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வருமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
பங்களாதேஷின் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் குறிப்பாக தெற்காசியாவில் காணப்படும் ரசல்ஸ் விரியன் பாம்புகளால் கடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்த சம்பவங்கள் சமீப வாரங்களில் வங்கதேச சமூக ஊடகங்களில் முக்கிய தலைப்பாக உள்ளது.

ரஸ்ஸலின் வைப்பர் பெரும்பாலும் மனித குடியிருப்புகளுக்கு அருகிலும், விவசாய நிலங்களிலும் குறிப்பாக அறுவடைக் காலத்தில் காணப்படும்.
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் 7,000 பேர் பாம்புக் கடியால் இறக்கின்றனர். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் சிகிச்சை பெற்றால் உயிர் பிழைப்பார்கள்.

2002 ஆம் ஆண்டு பங்களாதேஷில் ரசல்ஸ் விரியன் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது மீண்டும் அந்த இனம் திரும்பியுள்ளது.

பொதுவாக வறண்ட பகுதிகளில் வாழும் இந்த பாம்பு, பல்வேறு காலநிலை நிலைகளுக்கு ஏற்றவாறு மாறி, தற்போது வங்கதேசத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம், பாம்பு கடித்தல் வெப்பமண்டல நோய்களில் ஒன்றாகும் என்றும் அவற்றைச் சமாளிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் கூறுகிறது.