Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு

.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, மட்டும் தமிழ் பொது வேட்பாளரை கொண்டு வந்து விடாதீர்கள். அது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிக்கலை உருவாக்கிவிடுமென, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் அது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வேண்டாமென்றும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்குக்குள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பவர்களின் இரண்வது விருப்பு வாக்கை கோரி நான் பிரசாரம் செய்வேன்.

அதேவேளை, தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்காதோர், இன்ன பிற காரணங்களுக்காக தமது வாக்கை எமது வேட்பாளருக்கு வழங்க வேண்டுமெனவும் நான் நேரடியாக பிரசாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் கொள்கையை முரண்பாடுடன் அணுக நான் தயார் இல்லை. இதனை கண்ணியமாகவே அணுக வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.