Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துபவர்கள் இதுவரை முத்திரைத் தாளில் சமர்ப்பித்து வந்த உறுதிமொழிப் பத்திரம் வழங்கும் நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டி
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கு தமிழ்நாடு அரசு அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது. ஜனவரி 17 அன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த மாடுபிடி வீரர்களுக்குக் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், ₹2 கோடி மதிப்பில் உயர்தரக் காளைகள் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது விதிமுறைகளிலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

 

மாற்றப்பட்ட 3 முக்கிய விதிமுறைகள்
ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் வீரர்களின் கோரிக்கையை ஏற்று, கீழ்க்கண்ட மூன்று நடைமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன: ஆன்லைன் பதிவு முறை மாற்றம்: இதுவரை காளைகள் மற்றும் வீரர்களுக்குப் பின்பற்றப்பட்டு வந்த ஆன்லைன் பதிவு முறையில், உள்ளூர் காளைகளுக்கும் வீரர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைச் சரிசெய்ய, இனி அந்தந்த மாவட்ட அளவிலேயே பதிவுகள் குறித்து முடிவு செய்து கொள்ளத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் வீரர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்படும். ஆயுள் காப்பீடு கட்டாயம் இல்லை: போட்டியின் போது உயிரிழக்கும் வீரர்களுக்குத் தமிழ்நாடு அரசே உரிய நிவாரணத் தொகையை வழங்கி வருகிறது. எனவே, மாடுபிடி வீரர்கள் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. 

உறுதிமொழிப் பத்திரம் ரத்து
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துபவர்கள் இதுவரை முத்திரைத் தாளில் சமர்ப்பித்து வந்த உறுதிமொழிப் பத்திரம் வழங்கும் நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு முறையினால் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களின் தொடர் கோரிக்கையைப் பரிசீலித்த அரசு, காளைகளுக்குத் துன்பம் நேராவண்ணமும், போட்டிகள் தடையின்றி நடக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளது. மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் உலகத் தரத்தில் செயல்பட்டு வரும் நிலையில், அரசின் இந்த புதிய அறிவிப்புகள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.