Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

‘இலங்கையின் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்’: அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆணைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அங்கீகாரம்

.

 

இலங்கையின் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில், இலங்கையில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக அவுஸ்திரேலியாவிலுள்ள பெடரல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட திருமணத்தை இரத்துச் செய்யும் ஆணையின் செல்லுபடியை இலங்கை நீதித்துறை அங்கீகரித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்றுள்ள தம்பதியரின் திருமணத்தை முறியடிக்கும் உத்தரவை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்திம எதிரிமான்ன பிறப்பித்துள்ளார்.

மற்ற நாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட விவாகரத்து ஆணைகளை அங்கீகரித்து நடைமுறைப்படுத்தும் ரிட் விண்ணப்பத்தில், சமீபத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதிபதி குறிப்பிட்டார்.

சமீபத்திய தீர்ப்பில் (CA/WRIT/266/2021), இலங்கையில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் வேறொரு நாட்டில் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திருமண இரத்தை நிரூபிக்கும் செல்லுபடியாகும் ஆவணத்தை ஏற்றுக்கொள்வதை தடை செய்யவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எவ்வாறாயினும், இந்த ஏற்றுக்கொள்ளல் நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சான்றுகள் தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

இதன்படி, அந்தந்த நாட்டின் சட்டம், அயல்நாட்டில் நிச்சயிக்கப்படும் திருமணங்களை இரத்துச் செய்ய அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பை வழங்கியுள்ளதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என அதன் முதல் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, இலங்கையில் திருமணம் செய்து கொண்ட இரு தரப்பினரும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் போது அந்தந்த நாட்டில் நியாயமான காலம் தங்கியிருப்பது அவசியம்.

மூன்றாவதாக, கணவன்-மனைவி இருவரும் வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் மற்றும் திருமண நடவடிக்கைகள் தொடர்பாக அந்த நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

இதுவரை இலங்கையில் திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்ற இலங்கையர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் பெற்ற விவாகரத்துகள் உள்நாட்டு நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.