Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேர்தல் திகதி அறிவிக்கும் அதிகாரம் அடுத்த வாரம் ஆணைக்குழுவுக்கு

.

 

சட்ட மற்றும் நிதித் தடைகள் காரணமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் திறன் குறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்து வரும் நிலையில், அவ்வாறான தடைகள் எதுவும் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலைத் தொடர்வதற்கு தமக்கு சட்டப்பூர்வ அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக அரசாங்க அச்சக திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நிதி தொடர்பான விடயங்கள் பற்றியும் கலந்துரையாரடப்படும்” என்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தற்போது சட்ட ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ எந்த தடையும் இல்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 17 மற்றும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட நாளொன்றில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.