Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இன்று உலக தொழிலாளர் தினம். அனைத்து தொழிலாளர்களுக்கும் எமது தோழமை கலந்த வாழ்த்துக்கள்!.

.

 
இன்று உலக தொழிலாளர் தினம். அனைத்து தொழிலாளர்களுக்கும் எமது தோழமை  கலந்த வாழ்த்துக்கள். இன்னாள், உலக தொழிலாளர் வர்க்கம் தனது பறிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டத்தை நினைவு கூரும் நாள். தமது உரிமைகளுக்காக போராடாமல் மௌனமாக இருக்கும் எவருமே தமது உரிமைகளை வென்றுவிட முடியாது என்பதை குறிக்கும் நாள். ஒன்று படுவது மூலமே போராடும் பலத்தை நாம் பெற முடியும் என்பதை குறிக்கும் நாள். 
உரிமைகள் பறிக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட ஈழத் தமிழ் தேசிய இனம் ஒன்று படுவதன் மூலம் தன் பலத்தை பெற்று தன் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை இந்நாள் எமக்கு நினைவு படுத்துகிறது. ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் என்பது அந்த இன மக்களின் போராட்டமாகும். எமது விடுதலைப் போராட்டமும் இதையே குறித்து நிற்கிறது. சங்கதி குழுமம் இதையே தனது தலையாய கடமையாகக் கொண்டு பயணிக்கிறது என்பதை அனைவருக்கும் இந்நாளில் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.