நல்லூர் பிரதேச 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
நல்லூர் பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
நல்லூர் பிரதேச 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேச செயலர் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் மதிப்பிற்குரிய கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் மதிப்பிற்குரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பா.உ) மதிப்பிற்குரிய இராமநாதன் அர்ச்சுனா (பா.உ) ஆகியோர் கலந்துகொண்ட னர்.
மேலும் மாநகரசபை பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தரகள் என பலர் கலந்துகொண்L சிறப்பித்திருந்தனர்.
கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் சார்ந்த விடயங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், மேலும் பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல ஆக்கபூர்வமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.


