Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் 10 நாடுகளைச் சேர்ந்த 1,081 பேர் மரணித்திருப்பதாக பதிவாகியுள்ளது.

எகிப்தைச் சேர்ந்த 658 யாத்திரிகர்கள் மரணத்திருப்பதோடு 630 பேர் பதிவு செய்யப்படாத யாத்திரிகர்களாவர்.

இந்த ஆண்டு ஹஜ் கடமையில் மரணித்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டி இருப்பதோடு இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் பதிவு செய்யப்படாது ஹஜ் யாத்திரையில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

எகிப்தைச் சேர்ந்த மேலும் 58 வழிபாட்டாளர்கள் மரணித்திருப்பதாக சவூதி அரேபிய இராஜதந்திர வட்டாரத்தை மேற்கோள்காட்டி நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன்படி எகிப்தைச் சேர்ந்த 658 யாத்திரிகர்கள் மரணத்திருப்பதோடு இதில் 630 பேர் பதிவு செய்யப்படாத யாத்திரிகர்களாவர். வசதி படைத்த முஸ்லிம்கள் குறைந்தது ஒரு முறை செய்ய வேண்டிய இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையின்போது சுமார் 10 நாடுகளைச் சேர்ந்த 1,081 பேர் மரணித்திருப்பதாக பதிவாகியுள்ளது.

இம்முறை ஹஜ் கடமை சவூதியில் கடுமையான வெப்பம் கொண்ட கோடை காலத்தில் இடம்பெற்றிருந்தது. மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இந்த வாரத்தில் 51.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருப்பதாக தேசிய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலை 0.4 பாகை உயர்ந்து வருவதாக கடந்த மாதம் வெளியான சவூதியின் ஆய்வொன்று குறிப்பிட்டிருந்தது.

இதில் ஹஜ் கடமைக்கான உத்தியோகபூர் அனுமதிக்கான அதிக செலவை ஏற்க முடியாத ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் முறையற்ற வழிகளில் அந்தக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கானவர்களை மக்காவில் இருந்து வெளியேற்றியதாக சவூதி நிர்வாகம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.

எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற ஹஜ் வழிபாட்டில் கணிசமான பதிவு செய்யப்படாதவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி இல்லாததால் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் குளிரூட்டப்பட்ட வசதிகள் கிடைப்பதில்லை.

‘அரபா தினத்திற்கு முன்னர் பாதுகாப்புப் படையினரால் துரத்தப்பட்ட மக்கள் களைப்படைத்துள்ளனர். அவர்கள் சோர்வடைந்தனர்’ என்று அரபு இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் கடமையின் முக்கிய அம்சமான முழு நாளும் வெட்ட வெளியில் வழிபாட்டில் ஈடுபடும் நிகழ்வு குறித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதில் எகிப்தியர் இடையே ஏற்பட்ட மரணங்களுக்கான பிரதான காரணம் கடுமையான வெப்பம் என்று குறிப்பிட்டுள்ளனர். கடும் வெப்பம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, பாகிஸ்தான், இஸ்தோனேசியா போன்ற நாடுகளிலும் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.