கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக கிருஷ்ணன் அகிலன் மரியதாஸ் ராஜேந்திரன் ஆகியோர்
.
கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக கிருஷ்ணன் அகிலன் மரியதாஸ் ராஜேந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு, போட்டி பரிட்சை மற்றும் நேர்முகத் தேர்வில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போட்டி பரிட்சையில் சித்தியடைந்த இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் காரியாலயத்தில் தற்காலிக உதவி பணிப்பாளராக கடமை ஆற்றிய கிருஷ்ணன் அகிலன் நிரந்தர நியமனம் பெற்றுள்ளார்.
அதேபோல் கடந்த பல வருடங்களாக யாழ். மாவட்ட கடற்றொழில் மீன்பிடி பரிசோதராக கடமை ஆற்றிய மரியதாஸ் ராஜேந்திரன் அவர்கள் இந்த பரீட்சையில் சித்தி அடைந்து உதவி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அகிலன் & ராஜேந்திரன் இருவரும் மீன்பிடியியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்களாக நியமனம் பெற்றிருக்கும் இரு தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்றைய தினம்(23) கடற்றொழில் அமைச்சில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.


