Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தலதா கண்காட்சியை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை!

யாத்திரிகர்கள் வருகை தரும் வாகனங்களுக்கு என்று விசேட வாகன நிறுத்துமிடங்கள்

தலதா கண்காட்சியை முன்னிட்டு இன்று (17) முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா கண்காட்சியை முன்னிட்டு, யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கண்டி நகருக்குள் வருவதால், ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கண்டி நகருக்குள் நுழையும் வாகனங்கள் இன்று முதல் மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாத்திரிகர்கள் வருகை தரும் வாகனங்களுக்கு என்று விசேட வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளிலிருந்து ஸ்ரீ தலதா மாளிகைக்கு பேருந்து சேவைகள் மூலம் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்குப் பின்னர், யாத்திரிகர்களை வாகன நிறுத்துமிடத்திற்குத் திருப்பி அனுப்புவதற்காக பொதுப் போக்குவரத்து சேவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தயாள் இளங்கக்கோன் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி, ஏப்ரல் 18ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் இடம்பெற உள்ளது.

இதன் காரணமாக, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

மக்களை சோதனை செய்தல், போக்குவரத்து கட்டுப்பாடுகள், வீதித் தடைகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 10,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவ, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் மக்கள் வெள்ளை நிற உடையை அணிய வேண்டும் என்றும், பாரிய பொருட்கள், கேமராக்கள், காணொளி உபகரணங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.