Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நியமனம்”; மனித உரிமைகள் குறித்து விளக்கம்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக தான் நியமிக்கப்பட்டால், மனித உரிமைகள் விவகாரத்தை சிறப்பாக கையாள முடியும் என எலிசபெத் கே. ஹோர்ஸ்ட்.

“இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நியமனம்”; மனித உரிமைகள் குறித்து விளக்கம்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக தான் நியமிக்கப்பட்டால், மனித உரிமைகள் விவகாரத்தை சிறப்பாக கையாள முடியும் என எலிசபெத் கே. ஹோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் துடிப்பான சிவில் சமூகம் இருப்பதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எலிசபெத் கே. ஹோர்ஸ்ட் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் முன் தனது ஆரம்ப அறிக்கையை வழங்கினார்.

இதன்போது, குழுவின் தலைவரான செனட்டர் பென் கார்டின், இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை கையாள்வதில் ஹார்ஸ்டின் அர்ப்பணிப்பு மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய எலிசபெத் கே. ஹோர்ஸ்ட்,

அண்மையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் இலங்கை மக்களுக்கான அடிப்படை சுதந்திரத்தை முன்னேற்றுவதற்கான அமெரிக்க தூதரகத்தின் குறிக்கோள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

மேலும், இலங்கையில் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், மனித உரிமைகள் விடங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதி குறித்தும் அதன் உறுப்பினர்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.