Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஏற்றுமதி அபிவிருத்திக்காக விதிக்கப்பட்ட செஸ் வரியால் கிடைக்கும் வருவாயை அந்தந்த தொழில்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

தேயிலைத் துறையின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புக்கு இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்
1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கு அமைய ஒரு கிலோகிராம் தயாரிக்கப்பட்ட தேயிலைக்கு 3 ரூபா அனுமதிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும், குறித்த அனுமதிக் கட்டணத்தை தேயிலை செய்கை மற்றும் தொழில்துறையின் அபிவிருத்தி, ஊக்குவிப்புக்குப் பயன்படுத்த இதன் மூலம் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தொகை இலங்கை தேயிலை சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூலதன நிதியத்தில் சேர்க்கப்படும். இதன் ஊடாக தேயிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் தேயிலை காணிகளின் வினைத்திறனை மேம்படுத்தவும், புதிய நடுகைகளை மேற்கொள்வதற்கும், மறுநடுகை செய்வதற்கும், கைவிடப்பட்ட தோட்டங்களில் செய்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கும், இதன் பலனாக தேயிலைத் துறையின் வினைத்திறனை அதிகரித்து, தயாரிப்பின் தரத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தேயிலை சபையின் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர். 

அத்துடன், ஏற்றுமதி பயிரான தேயிலை மீது விதிக்கப்பட்ட செஸ் வரியால் கிடைக்கும் வருமானம் குறித்த தொழில்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படவில்லையா என குழு கேள்வியெழுப்பியது. இருந்தபோதும், இந்தப் பணம் தமது சபையினால் பெற்றுக்கொள்ளப்படுவதில்லையென அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

 ஏற்றுமதி அபிவிருத்திக்காக விதிக்கப்பட்ட செஸ் வரியால் கிடைக்கும் வருவாயை அந்தந்த தொழில்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அத்துடன், 1927ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நாணய மாற்றுண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காலாவதியான நிலையில் உள்ள சில பிரிவுகளை நீக்குதல் மற்றும் புதியவற்றை உள்ளடக்கும் நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கு அமைய குறித்த கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதன் ஊடாக மோசடியான மற்றும் பிழையான காசோலைகளை வழங்குபவர்கள் தொடர்பில் குற்றவியல் பொறுப்பைச் சுமத்த உதவும் என்பதுடன், அன்றாட வணிக நடவடிக்கைகளின் போது சட்டத்திற்கு அமைய நாணய மாற்றுச்சீட்டுக்களைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதுடன், காசோலைகளை மின்னணு முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.