Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு

.

அமெரிக்கா வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அன்று மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவத்தை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.இதில் பாலிஸ்டிக் ஏவுகணைத் தற்காப்பு அழிப்பான்கள் மற்றும் நீண்ட தூர பி-52 குண்டுவீச்சு விமானங்கள் அடங்கும்.ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது."ஈரான், அதன் கூட்டாளிகள் அல்லது அதன் பிரதிநிதிகள் இந்த தருணத்தை அமெரிக்க பணியாளர்கள் அல்லது பிராந்தியத்தில் உள்ள நலன்களை குறிவைக்க பயன்படுத்தினால், அமெரிக்கா எங்கள் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்." என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு எனக் கூறினாலும், இவையனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகு கூடுதல் துருப்புகள் வரும்.

கடந்த மாத இறுதியில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உட்பட, தரையில் அமெரிக்க துருப்புக்களால் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய படைகள் வரும் மாதங்களில் வரத் தொடங்கும் என்று ரைடர் கூறினார்.அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முடிந்த பிறகு இந்த படை நகர்த்துதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, கடந்த அக்டோபர் 26 அன்று இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக குறிப்பிடத்தக்க தாக்குதல்களை நடத்தியது.ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும், முக்கியமான அணுசக்தி மற்றும் எண்ணெய் தளங்களில் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை.இது ஈரான் 2024 அக்டோபர் தொடக்கத்தில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.