Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இறந்தவர்களை அஞ்சலிக்கும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை

.

 

இறந்தவர்களை அஞ்சலிக்கும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் ஏற்படவில்லை என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகரிடம் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆதங்கத்தை தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ்யை சாந்தித்து உரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து இலங்கையில் இடம் பெற்று வருகிறது.

இறுதி யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவு கூறுவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தடை செய்து வருகிறது.

இறந்தவர்களை நினைவு கூறும் மனிதாபிமான செயற்பாட்டை இலங்கை அரசாங்கத்திற்கு விளங்கப்படுத்தி நினைவு கூறும் உரிமையைப் பெற்றுத் தாருங்கள்.

அது மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் கனேடிய அரசாங்கம் தமிழ் மக்களின் தீர்ப்பு விடையம் தொடர்பில் தலையீடு செய்ய வேண்டும்.

ஏனெனில் கனடாவில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கனேடிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தலையீடு செய்வதற்கு உரிமை உள்ளது என தெரிவித்தேன்.

இதன் போது கருத்து தெரிவித்த தூதுவர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் கனடா தனது பூரன ஆதரவை வழங்கும் என தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.