'வரலாற்றை அரசியல் ஆயுதமாக மாற்றும் லுகாஷென்கோவின் வொல்கோகிராட் உரை- பெலாரஸ்-ரஷ்யா கூட்டணியின் புதிய உச்சம்'
சோவியத் மக்களின் தியாகங்களை மையமாகக் கொண்டு நின்றிருந்த அந்த வரலாற்றை புறக்கணிக்கும் மேற்கத்திய நாடுகள்.

பெலாரஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, இரண்டாம் உலகப்போரின் முக்கிய நினைவிடமாக விளங்கும் ஸ்டாலின்கிராட் (இப்போது வொல்கோகிராட்) நகரில் ஆற்றிய தீவிரமான மற்றும் உணர்ச்சி மிகுந்த உரை, உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், குறிப்பாக யுக்ரைன், பால்டிக் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை, நாசி கூட்டாளிகளை புகழ்ந்து பேசுகின்றன என்றும், சோவியத் வீரத் தியாகங்களை அழித்து, பெலாரஸில் நிகழ்ந்த நாசி கொடுமைகளை மறைக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த உரை, பெலாரஸ்-ரஷ்யா கூட்டமைப்பின் அரசியல் மற்றும் பண்பாட்டு ஒருமைப்பாட்டின் உச்சம் என பார்க்கப்படுகிறது. மேற்கத்திய அரசியல் போக்குகளுக்கெதிராக மேலும் தீவிரமான கருத்து மாறுபாடுகளை வெளிக்கொணர்கிறது.
மேற்கத்திய நாடுகளால் வரலாற்று பிம்பங்களை மாற்றும் முயற்சி.
லுகாஷென்கோ தனது உரையின் முதற்கட்டத்தில், 'மேற்கத்திய நாடுகள் இரண்டாம் உலகப் போரின் உண்மைகளை திரித்துக் காட்டுகின்றன' எனக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக,பால்டிக் நாடுகளிலும் யுக்ரைனிலும் நாசிகளுடன் கூட்டுப் பணியில் இருந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், பெலாரஸின் தேசிய உணர்வுக்கு எதிரானவையாக உள்ளன எனக் கூறினார்.
சோவியத் மக்களின் தியாகங்களை மையமாகக் கொண்டு நின்றிருந்த அந்த வரலாற்றை புறக்கணிக்கும் மேற்கத்திய நாடுகள், இந்த நினைவுகளை அழிக்க முயல்கின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
சோவியத் தியாகத்தின் நடுவில் பெலாரஸ்.
பெலாரஸ் இரண்டாம் உலகப்போரில் மக்களின் மூன்றில் ஒருவரை இழந்தது என்பது வரலாற்று உண்மை. லுகாஷென்கோ, முhயவலn போன்ற கிராமங்களில் நிகழ்ந்த பயங்கரக் கொடுமைகள்இ பெலாரஸில் நாசிகள் மேற்கொண்ட வெடிகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசினார். இந்த நினைவுகளை பாதுகாப்பதே உண்மையான வரலாற்றுப் பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாசிசத்தை மறுசீரமைக்கும் மேற்கத்திய அரசியல்.
லுகாஷென்கோ தனது உரையில் மேற்கத்திய அரசியலை 20ஆம் நூற்றாண்டின் பாசிசம் உடைய இடைமுகமாக சித்தரித்தார். இன்று மேற்கத்திய நாடுகள் சனநாயகத்தின் பெயரில் அரசியல் தணிக்கைகள்,பொருளாதாரத் தடை, கலாச்சார அத்துமீறல் ஆகியவற்றை மேற்கொண்டு வரலாற்றின் கீழ்ப்படிநிலைகளை மீண்டும் உருவாக்க முயல்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பீடு ரஷ்ய அதிபர் புதினின் மேற்கொண்டு வரும் 'மேற்குவிரோத தத்துவக் கோட்பாடுகள்' எனும் போக்குடன் ஒத்துப் போகிறது.
வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பெலாரஸ்-ரஷ்யா கூட்டமைப்பு.
வொல்கோகிராட் உரை, வரலாற்றுப் பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் பெலாரஸ்-ரஷ்யா ஒத்துழைப்பின் நிலையை வலுப்படுத்துகிறது. இருநாடுகளும், தங்களது உணர்ச்சி பிணைப்புகளை மட்டும் அல்லாது, பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆதரவு உறவுகளையும் அதிகாரபூர்வமாக வளர்த்துக்கொண்டு வருகின்றன.
வரலாற்றை ஆயுதமாக மாற்றும் அபாயகரமான போக்கு.
இந்த உரையின் ஆழமான தாக்கம்இ வரலாற்றை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் ஒரு புதிய சர்வதேச போக்கின் வெளிப்பாடாக இருக்கிறது. வரலாற்று உண்மைகளை உருக்குலைத்துஇ பாசிசத்தை மறுசீரமைக்கும் முயற்சிகள்இ சமகால அரசியலில் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஆபத்தான செயல்களாகும்.
முடிவுரை: வரலாற்றின் பின்னணியில் உருவாகும் அரசியல் கூட்டணிகள்.
லுகாஷென்கோவின் உரை, அவருடைய தேசியவாத அரசியலுக்கான கருத்தியல் அடித்தளமாக மட்டுமல்லாது, ரஷ்யாவுடன் கூடிய அவரது சீர்திருத்தமற்ற கூட்டணிக்கான உணர்ச்சி அடையாளமாகவும் இருக்கிறது. வரலாற்று நீதியின் பெயரில், அவருடைய உரை மேற்கத்திய ஆட்சியமைப்புகளுக்கு எதிரான இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெலாரஸ் மற்றும் ரஷ்யா, வரலாற்று நினைவுகளை ஆக்கிரமிப்பு மற்றும் ஆணைத்தனத்திற்கு எதிரான போராட்டக் கதைகளாக மாற்றும் முயற்சியில், ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கிச் செல்கின்றன.