Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! 28 பேர் உயிரிழப்பு, 20க்கும் மேற்பட்டோர் காயம். பாதிக்கப்பட்ட தமிழர்கள் உடல்நிலை சீராக உள்ளது!

உலகத்தையே உலுக்கிய பெஹல்காம் தாக்குதல்: தமிழர்கள் நிலை என்ன?

பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலத்தில், செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர்.

அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. மூன்று பேர் மட்டும் காயம் அடைந்துள்ளனர். அதில், இரண்டு பேரின் உடல்நிலை சீராக உள்ளது.

ஒருவர் மட்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசியுள்ளனர். தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரிகள் இன்று மாலை காஷ்மீர் சென்று சேர்ந்தவுடன், உடனடியாக பணிகளை மேற்கொள்வார்கள்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியிலிருந்த சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காயமடைந்து மருத்துவமனையில் உள்ள நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உள்ளதாக வெளியான சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்டறியும் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சுற்றுலாத் தலம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. பலரும், இந்த சம்பவத்தை “காட்டுமிராண்டித்தனமான செயல்” எனக் குறிப்பிட்டுள்ள கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், உள்ளூர் அரசியல் தலைவர்கள் முதல் ஐ.நா வரை கண்டனம் எழுந்துள்ளது.