Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு?

,

 நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு நேற்று (28)  முதல் டிசம்பர் 4 ஆம் திகதிவரை ஒரு வார காலத்துக்கு சுகாதாரத் துறைக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரினால் அனைத்து மருத்துவமனை மற்றும் சுகாதார நிறுவனங்களினது தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்களுக்கு சுகாதார வசதிகளைத் தடையின்றி வழங்குவதற்காக, மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மருத்துவமனைகளினது தலைவர்களும் நோயாளர் பராமரிப்புச் சேவைகளைத் தடையின்றி 24 மணிநேரமும் இயக்கக்கூடியவாறு ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தை அமைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அவசரத் தேவைகளுக்காக அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டு, சாரதிகள் தயாராக வைத்திருக்கப்படுவதுடன் , அனர்த்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அபாயமற்ற நோயாளிகளை மருத்துவ பரிந்துரையின் பேரில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால் மின்பிறப்பாக்கிகள், எரிபொருள் மற்றும் மாற்று வழிகளில் நீரைச் சேமித்து வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால மருந்துகளைப் பெறும் நோயாளிகள் அனர்த்தம் காரணமாக மருந்து இல்லாமல் இருப்பின், அருகிலுள்ள சுகாதார நிலையங்கள் மூலம் மருந்துகளைப் பெறவும், தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பிரசவத்துக்குப் பிந்திய தாய்மார்கள் குறித்த அபாயகரமான அறிகுறிகள் அவதானிக்கப்பட்டால், அவர்களை வசதிகள் கொண்ட மருத்துவமனைககு உடனடியாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.