Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

SLC இருபதுக்கு 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று

,

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நடத்தும் இருபதுக்கு 20 லீக் (SLC T20 League) தொடரின் இறுதிப் போட்டி இன்று (16) இடம்பெறவுள்ளது. 

எஸ்.எல்.சி கிரீன்ஸ் மற்றும் எஸ்.எல்.சி கிறேஸ் ஆகிய அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. 

இந்தப் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

புளூஸ், கிரீன்ஸ் மற்றும் கிறேஸ் ஆகிய 3 அணிகளும் இந்த தொடரின் முதல் சுற்றில் விளையாடியிருந்தன. 

இந்த அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கிரீன்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருந்தது. 

அதனடிப்படையில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. 

இரண்டாம் இடத்தில் உள்ள சரித் அசலங்க தலைமையிலான கிறேஸ் அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. 

இதன்படி குறித்த இரண்டு அணிகளும் இன்றைய இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.