Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அர்ச்சுனாவை விசாரிக்குமாறு கோரிக்கை! -அமைச்சர் ரத்நாயக்க.

.

பிரபல பெண் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஸ்வஸ்திகா அருளிங்கத்திற்கு எதிரான பாலியல் வன்முறைக் கருத்துகள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (17/03/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து ஸ்வஸ்திகா அருளிங்கம் பாலியல் வன்முறை தொடர்பான கருத்துகளை எதிர்கொண்டதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகக் கூறினார்.

மேலும், இந்த விவகாரம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் எழுப்பப்பட்டதாகவும், பெண் சட்டத்தரணி மீது நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய தீங்கு விளைவிக்கும் கருத்துகளை வெளியிட்டடிருப்பது நாடாளுமன்றத்திற்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அண்மையில் நாடாளுமன்றத்தில் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணைக்கான கோரிக்கை எழுந்துள்ளது.