சீமான் வேட்பு மனு தாக்கல்; களைகட்டிய தேவக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆயுஷ் வெங்கட் வாஸ்விடம் சீமான் தனது வேட்புமனுவை இன்று சமர்ப்பித்தார். இந்த நிகழ்வின் போது அவரது தாயார் மற்றும் மனைவி கயல்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, களத்தில் முதலாவதாக தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளது. அத்துடன், அனைத்து தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
குறிப்பாக, காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தவைமை ஒருங்கிணைப்பாளர் தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆயுஷ் வெங்கட் வாஸ் வசம் தமது வேட்பு மனுவை அவர் அளித்தார்.
காரைக்குடி தொகுதியை பொருத்தவரை, கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் டாக்டர் பிரபு ஆகியோர் களத்தில் உள்ளனர்.
வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவது தமிழக அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
மொத்தத்தில், வேட்புமனு தாக்கல் தொடக்கத்திலேயே காரைக்குடி தொகுதி முக்கியமான அரசியல் மையமாக மாறி உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட பிரச்சாரங்கள் வரும் நாட்களில் இங்கு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல் 23-ந் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


