Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

புலிகளுக்கு பிரித்தானியாவில் தொடரும் தடை – இலங்கை பாராட்டு; நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பில் அலி சப்ரி கருத்து

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் தடைசெய்யப்படவில்லை.

விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து கடைப்பிடிக்கும்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) எடுத்த முடிவை இலங்கை பாராட்டியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த கோரிக்கையை பிரித்தானியா தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளதாக” அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து கடைப்பிடிக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தனி தமிழீழ அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானியாவிடம் கோரியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் தடைசெய்யப்படவில்லை.

ஏனெனில் அது வன்முறையற்ற வழிமுறைகளின் மூலம் அவர்களின் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர முயல்கிறது” என்று அமைச்சர் தன பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் வெளிநாட்டு அரசாங்கங்களை புலிகள் குறித்து விவரிக்க வைப்பதே புலிகளின் சர்வதேச வலையமைப்பின் அணுகுமுறை என வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.