Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிளிநொச்சியில் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான பாடசாலை மாணவர்கள் விவகாரம்- காப்பாற்ற நினைக்கும் தமிழ் அரசியவாதி!

இதுவரை 16 மாணவர்கள் குறித்த பயிற்றுனரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டு ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறப்படும் சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பெற்றோர் தமது ஆதங்கங்களை வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த நபர் ஆண் மாணவர்கள் பலரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸாரின் கவனத்திற்கு  கொண்டு சென்ற நிலையில், நேற்றைய தினம் (11) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த ஆசிரியரை பிரபல தமிழ் அரசியல்வாதி ஒருவரும், பொலிசாரும் பாதுகாப்பதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதுவரை 16 மாணவர்கள் குறித்த பயிற்றுனரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களின் வாழ்வு சீரழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.