Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மூதூர் – மேன்காமம் குளத்தின் பகுதிகள் ஆக்கிரமிப்பு; உண்மையறியும் நோக்கில் சாணக்கியன் கள விஜயம்!

மேன்காமம் குளத்தின் பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் குளத்தின் பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அண்மைக்காலமாக இக்குளத்தின் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், கனரக வாகனங்களை பயன்படுத்தி குளத்தின் பகுதிகளை சேதப்படுத்தி, அங்கிருக்கும் நீரை வெளியேற்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சாணக்கியனிடம் அந்த கிராம மக்கள் முறையிட்டுள்ளனர்.

அதையடுத்து, அப்பகுதிக்கு இன்றைய தினம் நேரடி விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அங்கே கள நிலவரம் குறித்து அவதானித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக மத்திய நீர்பாசன திணைக்கள பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு நடவடிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

மேன்காமம் குளமானது நீண்ட காலமாக காலத்துக்கு காலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குளத்தின் பெரும்பகுதிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் மேன்காமம் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயம், நன்னீர் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.

குளம் ஆக்கிரமிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள அப்பிரதேச மக்கள் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அப்பகுதியில் எதிர்காலத்தில் குளம் இல்லாத சூழல் ஏற்படலாம் எனவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை எல்லைப்படுத்தி குளத்தினை தூர்வார்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு குளத்தினை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, குளத்தை பாதுகாக்க உதவுமாறும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.