Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சுகாதாரப் பரிசோதனையில் சாரதிகள், வர்த்தகர்கள்,போக்குவரத்து சபை ஊழியர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

அதிக வேகத்தில் செல்லும் அரச பேருந்து சாரதிகள்; அதிஉயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

குளியாப்பிட்டி சுகாதார அமைச்சு அலுவலகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனையில் குளியாப்பிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள், வர்த்தகர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு அதிக ஆபத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் சுகாதார துறை ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இந்த அதி உயர் இரத்த அழுத்தம் காரணமாக பேருந்தை கூட மிகவும் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச்செல்வதாகவும் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள அனைத்து இலங்கை அரச போக்குவரத்து ஊழியர்களுக்கும் மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதற்காக விரைவில் மருத்துவ கிளினிக்கை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.