Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வருடத்தில் அதிகம் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் ?

,

வருடத்தில் அதிகம் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் ?

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் 223,423 மோட்டார் சைக்கிள்கள் 2025 ஆம் ஆண்டின் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். 

அதற்கு அடுத்தபடியாக 55,338 கார்களும், 13,850 முச்சக்கர வண்டிகளும், இந்த அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக 35,268 மின்சார வாகனங்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
அதற்கமைய, இந்த வருடம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்குகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

திணைக்களத்திற்கு இந்த வருட இலக்காக 16 பில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த இலக்கையும் தாண்டி கடந்த நவம்பர் 30 ஆம் திகதி 17.8 பில்லியன் ரூபாய் வருமானத்தை திணைக்களத்தால் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
எதிர்வரும் ஆண்டிற்காக 18 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை திறைசேரி திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாகவும், அந்த இலக்கையும் அடைய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு முடியும் எனவும் அவர் மேலும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.