Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்; கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸை முந்தினாரா ட்ரம்ப்?

.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும்பட்சத்தில் தொடர் கருத்துக் கணிப்பில் டொனால்ட் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் பின்னடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மூன்று கருத்துக் கணிப்புகளின்படி வெள்ளை மாளிகைக்கான போட்டி இறுதிக்கட்டத்தை அண்மிக்கும்போது ஹாரிஸின் முன்னிலை குறைந்துவிட்டது.

சமீபத்தில் என்பிசி செய்திகளின் கருத்துக்கணிப்பில்,

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் 48 சதவீதத்துடன் சமநிலையில் உள்ளனர்.

கடந்த மாத கணக்கெடுப்பில் கமலா ஹாரிஸ் ஐந்து புள்ளிகள் முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஏபிசி செய்திகள்/ Ipsos வாக்கெடுப்பில், சாத்தியமான வாக்காளர்களில் ஹாரிஸ் 50 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை முன்னிலை வகிக்கிறார்.

ஆனால், கடந்த மாதம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜனநாயகக் கட்சி 52 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை முன்னிலை பெற்றது.

அண்மையில் சிபிஸ் செய்திகள்/ YouGov கருத்துக் கணிப்பின்படி, சாத்தியமான வாக்காளர்களில் ஹாரிஸ் 51 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை உயர்ந்துள்ளார்.

சமீபத்திய புள்ளி விபரங்களைத் தொடர்ந்து ரியல் க்ளியர் வாக்கெடுப்பின் முக்கிய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் 1.4 சதவீதம் முன்னிலை பெற்றுள்ளார்.

கட்சியின் முக்கிய தொகுதிகளினாக ஸ்பானியர்கள் மற்றும் ஆபிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் ஹாரிஸ் ஆதரவைப் பெற தவறிவிட்டார் என்பது ஜனநாயகக் கட்சியினரின் பெரும் கவலையாக உள்ளது.

பெண்கள் மத்தியில் ஹாரிஸ்க்கு ஆதரவு இருந்தாலும் ஆண்களிடையேயும் உற்சாகத்தை பறைசாற்ற அவர் போராடினார்.

ஆனால், அண்மைக் காலமாக ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஸ்பானியர்கள் ட்ரம்ப்பை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சியேனா கல்லூரியின் கருத்துக் கணிப்பின்படி, 78 சதவீத கறுப்பின வாக்காளர்கள் மற்றும் 56 சதவீதம் ஸ்பானிய வாக்காளர்களை ஹாரிஸ் பெற்றுள்ளார்.

இருப்பினும் 2020 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் பெற்றுக்கொண்டதை விட இது குறைவானது.

ஹாரிஸ், ட்ரம்ப் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வட கரோலினா மற்றும் அரிசோனாவில் தங்களது பிரச்சாரங்களை நடத்தினர்.

வட கரோலினாவின் க்ரீன்வில்லியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளிக்கு அரசாங்கத்தின் பதில் குறித்து தவறான தகவலை ட்ரம்ப் பரப்பியதைக் குறித்து கமலா குறி வைத்து பேசினார்.

இதில் உள்ள சிக்கல், வெளிப்படையானது என்பதைத் தாண்டி மக்கள் உயிர் காக்கும் தகவல்களைப் பெறுவது கடினமாகும் என ஹாரிஸ் கூறினார்.

இதற்கிடையில் ட்ரம்ப், 10,000 கூடுதல் எல்லை ரோந்து முகவர்களை பணியமர்த்த அழைப்பு விடுக்க அரிசோனாவின் பிரெஸ்கோட் பள்ளத்தாக்கில் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி, நான் வெற்றி பெற்ற பின்னர் அனைத்து முகவர்களுக்கும் ரூபாய் 10,000 பிடிமானம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறினார்.