Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தலை நடத்த எளிதான நாள் எது?; விளக்கமளிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய

.

ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு, சுமார் ஒரு வார கால அவகாசம் எடுத்துக் கொள்வதில் சிக்கல்கள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமான ”நெத் நியூஸ்” செய்தி சேவைக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் ஜூலை மாதம் 24, 25 அல்லது அதனை அண்மித்த திகதிகளில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்த எளிதான நாள் எது என்பது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

”ஜூலை மாதம் 17ஆம் திகதி தொடக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது. காரணம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி போயா தினம் ஆகும்.

அதனடிப்படையில், செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் தேர்தலை நடத்த முடியும், எவ்வாறாயினும், செப்டம்பர் 20ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவகாசம் உள்ளது.” என தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.