Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

35 வருடங்களின்பின் காங்கேசன்துறை - பலாலி இடையில் அரச பேருந்து சேவை ஆரம்பம்!

தேர்தல் கால நாடகங்களுக்கு அழகாக அரிதாரம்!

இலங்கை போக்குவரத்து சபையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு புதிய பேருந்து சேவைகள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மானிப்பாய் – ஆலங்குளாய் – அளவெட்டி ஊடாக தெல்லிப்பழை நோக்கி முன்னெடுக்கப்படும் வகையில் ஒரு பேருந்து சேவையும்,

காங்கேசன்துறையில் இருந்து பலாலி வீதியூடாக மற்றொரு பேருந்து சேவையுமே இவ்வாறு மீள ஆரம்பிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்கவின் பிரசன்னத்துடன் பேருந்து சேவை ஆரம்பமானது.

நீண்ட காலங்களுக்கு பின்னர் குறித்த வழித்தடங்கள் ஊடாக பேருந்து சேவை மீள ஆரம்பித்ததால் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

35 வருடங்களின் பின்னர் கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி வரை இன்றையதினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டதுடன் பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

குறித்த ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவனாந்தராஜா உள்ளிட்ட போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.