Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு மாநாடு – ஓகஸ்ட் 31!

ஈழத்து நவீன தமிழ் நாடகப்புலத்தில் பேராளுமையாகத் திகழ்ந்த குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்.

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து  நடத்தும் குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும், எதிர்வரும் ஓகஸ்ட் 31 திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பி.ஏ. டினேஸ் கூன்ஜே தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், தமிழ் அரங்கு மற்றும் கலைகளின் சமகால வெளிப்பாடுகள் என்ற தொனிப்பொருளில் மாநாடு நடைபெறவுள்ளது.

இதற்கு பிரதான திறப்புரையை வழங்குவதற்காக உலகப்புகழ்பெற்ற தொடர்பியல் துறைப்  பேராசிரியர் கோ.இரவீந்திரன் இந்தியாவிலிருந்து வருகைதருகிறார்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக கலைப்பீடாதிபதி பேராசியரியர் எஸ்.ரகுராமும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆய்வு மகாநாடு நான்கு முக்கிய பகுதிகளாக நடைபெறவுள்ளது. காலை 9.00 -10.00 மணி வரை தொடக்க விழாவும் அரங்கத்திறப்ரையும் நடைபெறும்.

தொடர்ந்து 10.30 – 12.30 மணி வரை ஆய்வு அளிக்கைகளும் கலந்துரையாடல்களும் நடைபெறும்.

மாலை 2.00 – 3.30 மணி வரை குழுநிலைக்கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது, இதில் ஈழத்தின் தமிழ்நாடகத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேராசிரியர் சி. மௌனகுரு தலைமையில் நடைபெறவுள்ளது.

மாலை 4.00 மணிக்கு குழந்தை ம.சண்முகலிஙகத்தின் சிறுவர் நாடகங்களான பஞ்சவர்ண நரியார், கூடிவிளையாடு பாப்பா  போன்ற நாடகங்கள் மேடையேறுகின்றன. இவற்றை செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்து வழங்குகின்றது.

அவற்றைத் தொடர்ந்து குழந்தை ம.சண்முகலிங்கத்தின் புகழ்பெற்ற நாடகமான எந்தையும் தாயும் நாடகம் மேடையேறுகின்றது. இதனை மலையகத்திலிருந்து தியேட்டர் மேட்ஸ் நாடககக்குழுவினர் மேடையேற்றுகின்றார்கள்.

ஈழத்து நவீன தமிழ் நாடகப்புலத்தில் பேராளுமையாகத் திகழ்ந்த குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் இந்த நிகழ்வு நாடகர்கள், நாடகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக அமைந்திருக்கும். இதில் பங்கு கொள்ளுமாறு நாடகத்துறை ஆர்வலர்களை ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளார்கள்