Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இதைதான் முதலில் செய்யவுள்ளேன் – அநுர

.

மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க  தெரிவித்தார்.

(22) இரவு கொழும்பு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே  அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க,

மேலும் கருத்து தெரிவித்த புதிய ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க,

“இந்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது ஒரு வெற்றி.
அடுத்த தேர்தலுக்கு முன் தேர்தல்களில் திருத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன். சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்பதை உணர்ந்துள்ளோம். அதில் விசேட கவனம் செலுத்துவேன்.

நாடு பல வழிகளில் நிலையற்று உள்ளது. மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்.

நம் நாட்டில் எந்த தேர்தலிலும் யாரும் இறக்கக்கூடாது.
நம் நாட்டில் பல விடயங்கள் மாற வேண்டும். தேர்தலை நடத்துவது, வெற்றியை கொண்டாடுவது, பின்னர் மற்றையவருக்கு பயத்தை ஏற்படுத்துவது போன்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பல பிளவுகளை மிக விரைவாக சமரசம் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் நாம் முன்னோக்கி செல்ல முடியும்” என்றார்.