Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில் இலங்கைத்தீவு முழுவதிலும் பாரிய போராட்டத்துக்கு தயாராகும் ஜேவிபி.

.

தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில் இலங்கைத்தீவு முழுவதிலும் பாரிய போராட்டத்துக்கு தயாராகும் ஜேவிபி.

தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில் இலங்கைத்தீவு முழுவதிலும் பாரிய போராட்டத்துக்கு ஜேவிபி தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதன் உண்மைத் தன்மை எவ்வாறு இருப்பினும், மின்சார திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த தினங்களில் புதிய ஒரு போராட்டத்தை ஜேவிபி தீர்மானித்திருந்தது.

அதன்படி, கடந்த வியாழக்கிழமை (09) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது.

இதில், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் ஜே.வி.பியை பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மின்சார திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மின்சார சபையானது இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுகின்றது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு , மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கட்டணத்தை அதிகரிப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களை மேற்கொண்டு வருகிறது.

எனினும், திடீரென புதிதான ஒரு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள், தொழிற்சங்கங்கள், மின்சார மொத்த விற்பனை நிலையத்தைக் கோரி எந்தவொரு இடத்திலும் போராட்டங்களை நடத்தவில்லை‘ என தெரிவித்தார்.

சுனில் ஹந்துன்னெத்தியின் இந்தக் கருத்து ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தியைப் பிரநிதித்துவப்படுத்தி எதிர்காலத்தில் நடத்தப்படும் மின்சார தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான எச்சரிக்கையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.