Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மக்கள் விரும்பினால் ஏனைய கட்சி உறுப்பினர்கள் இணைக்கப்படுவர்: ஜே.வி.பி. வகுக்கும் புதிய அரசியல் வியூகம்.

சிங்கள வார இதழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய !

மக்கள் விரும்பினால் ஏனைய கட்சி உறுப்பினர்கள் இணைக்கப்படுவர்: ஜே.வி.பி. வகுக்கும் புதிய அரசியல் வியூகம்.

தேசிய மக்கள் சக்தியில் இணைய ஆர்வமுள்ள ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ,பொது மக்கள் ஏற்றுக் கொள்வதாக ஏதேனும் சமிக்ஞைகள் கிடைத்தால் மாத்திரம் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சிங்கள வார இதழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்ளப்படுவார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி என்பது அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்கள் தெரிவு என்பதால் ஏனைய கட்சி உறுப்பினர்கள் எங்களுடன் இணைய பொது மக்களின் விருப்பம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது கட்சிச் சின்னமான திசைக்காட்டியைச் சுற்றி மேலும் அரசியல் பலங்களை இணைத்துக்கொள்வதற்கான ஒரு முயற்சி என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

மேலும், ஆரம்பத்தில் ஜேவிபி என்பது ஜாடிக்கு ஏற்ற விதத்தில் மூடியாக மாறும் கொள்கையை எதிர்த்தவர்கள் எனினும் தற்போது அனுர உள்ளிட்ட குழு அவ்வாறு மூடியாக மாறுவதை ஆதரிப்பவர்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.