Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கிரீன்லாந்தை வாங்குவதுடன், பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பும் டிரம்ப்!

.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், கிரீன்லாந்தை வாங்குவதுடன், பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவதாகவும் கூறியது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த இலக்குகளுக்கு ராணுவ அல்லது பொருளாதார பலத்தை அவர் பயன்படுத்துவாரா என்று ஜனவரி தொடக்கத்தில் கேட்கப்பட்ட போது, அவர் பின்வருமாறு பதிலளித்தார், "அதைக் குறித்து என்னால் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது."

குறைவான மக்கள் தொகை கொண்ட கிரீன்லாந்து தீவில் அரிய தாதுக்கள் மிகப்பெரிய அளவில் கிடைக்கின்றன. இந்த தாதுக்கள் பேட்டரிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் முக்கியமானவை.

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தை ஆளும் தலைவர்கள் இந்த பகுதி விற்பனைக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளனர்.

டிசம்பரில், பனாமா கால்வாய் வழியாக செல்ல பனாமா நிர்வாகம் 'அபத்தமான, மிகவும் நியாயமற்ற' கட்டணங்களை வசூலிப்பதாகக் கூறிய டிரம்ப், இதை நிறுத்தாவிட்டால் பனாமா கால்வாயை அமெரிக்காவிடம் திருப்பித் தருமாறு கோருவேன் என்றார்.

பனாமாவில் பெரும் பொருளாதார முதலீடுகளைக் கொண்டுள்ள மற்றும் கால்வாயை அடிக்கடி பயன்படுத்தும் நாடான சீனா குறித்து தான் கவலை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால், கால்வாய் மீதான தங்களது இறையாண்மை 'பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது' என்றும், நீர்வழிப் பாதையில் 'சீன தலையீடு' இல்லை என்றும் பனாமா கூறியுள்ளது.

மேற்கூறிய 2 பிராந்தியங்களில் எதனையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் டிரம்பின் 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற பார்வை, அந்நாட்டின் எல்லைக்கு அப்பால் கூட தாக்கம் செலுத்தக்கூடும் என்பதையே அவரது அறிக்கைகள் காட்டுகின்றன.