Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாமலின் முயற்சிகள் காற்றில்: ரணில் பக்கம் நிற்கும் ராஜபக்ச குடும்பம்

.

ஐனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பொருத்தமான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க முடியாமல் போனால், அதற்குத் தான் முன்னிலையாவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்த போதிலும் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய அரசியல் கலந்துரையாடல் ஒன்றுக்காக பசில் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச கலந்துக்கொண்ட போதே இந்த விடயம் வெளிவந்துள்ளது.

இந்த கலந்துரையாடல் ரணில் விக்கிரமசிங்க தரப்பிலிருந்து சாகல ரத்நாயக்க மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் அதற்கு தலைமை தாங்கியுள்ளனர்.

அன்றைய தினம் கலந்துரையாடலில் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற யோசனை தொடர்பில் அநேக காரணிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது அதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு ராஜபக்ச குடும்பத்திடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, நாமல் ராஜபக்ச 2029 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இம்முறை ஒத்திகைக்காக கலந்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் பலனலிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.