2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக செலுத்தப்பட்டு நாடு பொருளாதார ரீதியாக மீட்சி பெறும்! – 2025 வரவு – செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி
.

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக செலுத்தப்பட்டு நாடு பொருளாதார ரீதியாக மீட்சி பெறும் என்ற உறுதியை வழங்குகிறேன். நாம் ஆட்சியை பொறுப்பேற்றபோது எதிர்க்கட்சியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகள் அனைத்தையும் தோற்கடித்துள்ளேம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு- செலவுத் திட்டத்தினை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
சுதந்திரத்திற்குப் பின்னர் 2022ஆம் ஆண்டில் நாடு மிகவும் சிக்கலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தது. 2022ஆம் ஆண்டில் நெருக்கடி ஏற்பட்டாலும், நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள் வரலாற்று மற்றும் கட்டமைப்பு ரீதியானவையாகும். இக்குறைபாடுகள் குறுகிய பார்வை கொண்ட ஆட்சி மற்றும் மோசமான பொது நிதி முகாமைத்துவத்தினால் மேலும் அதிகரித்தன.
இந்த நெருக்கடியானது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் இயல்புநிலையை சீர்குலைத்ததுடன் வியாபாரங்கள் முதல் வீடுகள் வரை அனைத்து துறைகளிலும் காணப்பட்டது. எரிபொருள், மின்சாரம், அத்தியாவசிய உணவுப் பொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள், சேவைகளில் ஏற்பட்ட பற்றாக்குறையானது, நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள், ஊனமுற்றோர் மற்றும் முதியவர்கள் என அனைவரையும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கியது. அடிப்படை தேவைகளைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததுடன், சிலர் வரிசையில் காத்திருக்கும்போது மரணித்தனர்.
2022ஆம் ஆண்டின் நெருக்கடி வெறும் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல. அது அரசியல் நிர்வாகம் மற்றும் ஆளுகையில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என்பதுடன் இதற்கு முன்னர் எப்பொழுதும் இல்லாதளவிலான துன்பங்களுக்கு வழிவகுத்தது. பொருளாதாரத்தின் ஆரம்ப வீழ்ச்சி நிவாரணமளிக்கப்பட்டு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்துள்ளதுடன், சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் வலுவற்ற பிரிவுகளைப் பாதித்துள்ளது. பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியைத் தாண்டி, இந்நெருக்கடியானது நாட்டில் அரசியல் மாற்றமொன்றினையும் ஏற்படுத்தியது. தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதாரக் கஷ்டங்கள் ஊழல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான சமூக அமைதியின்மைக்கு வழிவகுத்தன. அவர்கள் அதிகாரத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன் வெகுசன போராட்டங்கள் மூலம் விரட்டியடிக்கப்பட்டனர்.
அதன் பிறகு ஒரு தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது, இது மக்களின் ஆணையை சிதைக்கும் செயலாகும். இருப்பினும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான மக்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை. ஏனெனில் இந்த தற்காலிக அரசாங்கத்தின் உருவாக்கம் பெரும்பாலும் பொதுமக்களின் இழப்பில் ஊழல்வாதிகளை மீட்கும் முயற்சியாகும். 2023 மார்ச் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜனநாயக சட்டபூர்வமான தன்மையில் குறைபாடுகள் வெளிப்பட்டன.
அசைக்க முடியாத உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்துடன் 2024 கடைசியில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முறைமையை மாற்றுவதன் மூலம் நாட்டை பொதுவான செழிப்பை நோக்கி வழிநடத்தும் வலுவான மக்கள் ஆணையுடன் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது.
எனவே, நிலைபேறான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கி பொருளாதாரத்தை வழிநடத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான அடித்தளமிடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் நாங்கள் எதிர்கொண்ட சவால்களில் ஒன்று, இந்த மகத்தான வெற்றியைத் தடுக்க முயன்றவர்களால் எமது பொருளாதாரக் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு எதிரான கட்டுக்கதைகளையும் தீய பிரச்சாரங்களை எதிர் கொண்டமையாகும். இலங்கை ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி 400 ரூபாயாக உயரும், எரிபொருள் வரிசைகளின் சகாப்தம் மீண்டும் ஏற்படும், சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களும் வெளிநாடுகளும் புதிய அரசாங்கத்தைத் தனிமைப்படுத்துவர், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழப்பார்கள், தனியார் சொத்துக்கள் முழுமையாக தேசியமயமாக்கப்படும் போன்ற தவறான கருத்துக்கள் காணப்பட்டன.
அற்ப அரசியல் நோக்கங்களுக்காக இயக்கப்படுகின்ற கட்சிகளால் உருவாக்கப்பட்ட எமது அரசாங்கத்திற்கெதிரான பிம்பம் மேலதிக தடைகளை ஏற்படுத்தியது. எமக்கெதிராக இதுபோன்ற எதிர் பிரசாரங்கள் இருந்தபோதிலும், புதிய சூழ்நிலையினை வெற்றிகரமாக வழிநடத்தவும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் வெளிநாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேணவும், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும் எம்மால் முடியுமாக இருந்தது.
அதன்படி, விலை மற்றும் நிதித் துறை படிப்படியாக ஸ்திரமடைந்ததுடன், ஒரு வருட அளவீட்டின்படியான திறைசேரி உண்டியல் வீதம் 8.8வீதமாகக் குறைவடைந்து, பணவீக்கம் 2025 சனவரியில் 4.0வீதம் எதிர்மறையாகக் காணப்பட்டது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் குறிப்பிடத்தக்க அளவிலான கடன் மீள்கொடுப்பனவுக்குப் பின்னர் அந்நிய செலாவணி இருப்பானது 6.1 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக, நாணய மதிப்பு தேய்மானம் குறித்த விடயங்கள் இருந்தபோதிலும், இலங்கை ரூபாவின் மதிப்பு ஒரு டொலருக்கு ஏறக்குறைய 300 ரூபாக வலுவடைந்துள்ளதுடன் 2025இல் பொருளாதார வளர்ச்சி 5வீதம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 நடுப்பகுதியில் இருந்து இலங்கை நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் பொருளாதார சீர்திருத்தங்களைச் செயற்படுத்தியது. சில சந்தர்ப்பங்களில் இந்த தீர்வு நடவடிக்கைகள் மக்கள் மீதான அழுத்தங்களை அதிகரித்தன – குறிப்பாக செலவு-பிரதிபலிப்பு எரிசக்தி விலை நிர்ணயம், வரி அதிகரிப்பு மற்றும் வட்டி விகித உயர்வு போன்ற நடவடிக்கைகளாகும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் சர்வதேச நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் பங்கை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், எமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார இறையாண்மையின் வடிவத்தில் பொருளாதாரத்தின் முழு கட்டுப்பாட்டையும் அடைய வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம்.
பொருளாதாரத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக, 2024 டிசம்பரில் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை முடிவடைந்தமையாகும். நாம் ஆட்சிக்கு வந்தபோது, இலங்கை பொது படுகடனை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததனால், அம்முயற்சியில் சடுதியான மாற்றம் ஏற்பட்டால் பொருளாதாரம் சீர்குலையும் என்பதனைக் கருத்திற் கொண்டு, நாம் அதனைத் தடுக்க விரும்பவில்லை. இந்த முடிவை எடுக்கும்போது, கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு ஏற்கனவே செலவிடப்பட்ட குறிப்பிடத்தக்க நேரத்தையும், அச்செயன்முறையைத் தொடர்வதால் மக்களுக்கு ஏற்படும் மேலதிகச் செலவுகளையும் நாம் கருத்திற் கொண்டோம்.
இந்தச் செயல்முறையானது இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்கியுள்ளதுடன், கடன் மீள்கொடுப்பனவு செலவுகளையும் கணிசமாகக் குறைக்கிறது. ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற வெளிநாட்டு கடன் அல்லாத உட்பாய்ச்சல்களை அதிகரிக்கவும் வெளிநாட்டு நிதியிருப்பிக்களை வலுப்படுத்தவும் நாடு இந்த நிதி வாய்ப்பினை பயன்படுத்துவது அவசியமாகும். மேலும் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது எதிர்காலத்தில் கடன் மூலதனத் திருப்பிச் செலுத்துதல்களை சீராக மீண்டும் தொடங்குவதற்கு உதவும். இதன் விளைவாக, பிட்ச் மதிப்பீடுகள் மற்றும் மூடிஸ் போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்களால் இலங்கையின் கடன் மதிப்பீடுகள் ஒரே நேரத்தில் பல படிகளால் மேம்படுத்தப்பட்டன. மொத்தத்தில் இந்த முன்னேற்றங்கள் படிப்படியாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சு, வேலை உருவாக்கம் மற்றும் ஊதிய முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய காரணிகளாக உள்ள சர்வதேச நிதிப் பரிமாற்ற செலவுகளைக் குறைக்கின்றன.
மறுபுறம், பொருளாதார நெருக்கடியானது பலரை, குறிப்பாக சமூகத்தின் மிக வலுவற்ற பிரிவினரை தொடர்ந்து பாதிக்கிறது. இந்த நெருக்கடி வாழ்க்கைச் செலவில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்ததுடன் பணவீக்கம் 2022 இல் 70% வரை உயர்ந்திருந்தது. பணவீக்கம் குறைந்தாலும், விலை மட்டம் உயர்ந்தே உள்ளது. மேலும் சம்பள வளர்ச்சி அதற்கேற்ற வேகத்தில் இல்லை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைவடைகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உண்மையான சம்பளம் கணிசமாகக் குறைவடைந்துள்ள நிலையில், நியாயமான சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், அரசாங்கம் அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இலக்கிடப்பட்ட பணக் கொடுப்பனவுகளை அதிகரித்ததுடன் பயனாளிகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையுடையவர்களுக்கு பிற இலக்கிடப்பட்ட சமூக நன்மைகளையும் வழங்கியுள்ளது.
இருப்பினும், நாட்டில் பரவலாக காணப்படும் வறுமையை ஒழிக்க இவ்வகையான பணக் கொடுக்கனவுகள் நிலையானதொரு தீர்வாகாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சிரமங்கள் மற்றும் சவால்கள் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத குடிமக்களைக் கவனித்துக் கொள்வது மனிதாபிமானமிக்க அரசாங்கத்தின் கடமையாகும். அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தில் உட்சேர்ப்பு மற்றும் தவிர்ப்பு சார்ந்த தவறுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால்தான், செயன்முறையில் தொடர்ச்சியான மேம்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு மிகவும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து இலங்கையர்களும் தங்கள் முழு திறனுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது வறுமை ஒழிப்புக்கான நிலையான தீர்வுக்கு அவசியமாகும்.
அனைத்து பிரசைகளும் மேம்பட்ட பொருளாதார வாய்ப்புகளைப் பெறும் வகையிலும் அதன் விளைவாக ஏற்படும் பலன்கள் சமூகத்தின் அனைத்து வகை மக்களாலும் அனுபவிக்கப்படும் வகையில் பொருளாதார வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய முறையில் நடைபெற வேண்டும். வளர்ச்சி என்பது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான வழிமுறையாக இல்லாவிட்டால் அதனால் சமூகத்திற்கு எந்த பெறுமானமும் கிடையாது. பல தசாப்தங்களாக, பொருளாதார செயற்பாடு மற்றும் பொருளாதார ஆதாயங்கள் சிலரிடையே குவிந்துள்ளன. சமீபத்திய (2019) வீட்டு வருமானம் மற்றும் செலவின கணக்கெடுப்பின்படி, வீட்டுச் செலவினங்களில் 47% ஆனது முதல் 20 வீத குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டதாகும். குடும்ப மட்டத்தில் வருமானத்தின் குவிப்புக்கு சான்றாக மேல் மாகாணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2023) 44 வீதம் பங்களிக்கிறது. இந்த சமத்துவமின்மை புவியியல் ரீதியாகவும் வெளிப்படுவதுடன், பொருளாதார வாய்ப்புகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் வகையில், பொருளாதாரத்தின் பெரியதொரு ஜனநாயகமயமாக்கலே முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையாக உள்ளது. மக்கள் போராட்டம் மற்றும் கடந்த ஆண்டு தேர்தல்களில் சாதாரண மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை நிலைநாட்டினர். பொருளாதார உரிமைகளும் அவ்வாறே நிலைநாட்டப்படுவது இந்த வரவுசெலவுத் திட்டத்தின் கோட்பாடாகும்.
இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் குறிப்பிடத்தக்க வரையறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. 2022 முதல் இலங்கை அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை நாம் நினைவூட்ட வேண்டியதில்லை. பெரும்பாலான நாடுகள் அரச கடன் மீளச்செலுத்த தவறியதனைத் தொடர்ந்து “இழந்த தசாப்தம்” என்று அழைக்கப்படும் ஒரு காலகட்டத்தை கடந்து செல்கின்றன. இருப்பினும், ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைய முடிந்தது. பின் விளைவுகள் இல்லாமல் அந்த ஒழுக்கத்தை எளிதாகவோ அல்லது விரைவாகவோ தளர்த்த முடியாது. எனவே, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது அரசிறை ஒழுக்கம் பொருளாதார தொலைநோக்கு மற்றும் வழிகாட்டலுடன் தயாரிக்கப்பட்டது. இவ் வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13வீதம் முதன்மை அரசாங்க செலவின வரையறையாகும் என்ற முக்கிய அரசிறை விதியை பொது நிதி முகாமைத்துவச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டம் இந்தத் தேவையை முன்நிறுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தகைய செலவினங்களிலிருந்து சிறந்த சமூக விளைவினைப் பெறுவதை உறுதிசெய்வதற்காக, எமது வரையறுக்கப்பட்ட வரி நிதியளிக்கப்பட்ட வளங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் நாம் கவனமாகவும் ஒழுக்கமாகவும் இருத்தல் வேண்டும்.
விரும்பிய அளவுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில், எமது முக்கிய முன்னுரிமைகள் பலவற்றிற்கு நிதி ஒதுக்க முடிந்தது. இவ்வாறு கவனம் செலுத்துகின்ற பகுதிகள் பாரம்பரிய வரவுசெலவுத்திட்டங்களிலிருந்து வேறுபட்டவை என்றாலும், தற்பொழுது இடம்பெறும் முன்னெடுப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் நிதி ஒதுக்கியுள்ளோம். அதே நேரத்தில் இவற்றை எமது ஆணையுடன் இணைக்க தேவையான மாற்றங்களைச் செய்கிறோம். அஸ்வெசும திட்டம் மற்றும் பிற சமூக நல முன்னுரிமைகளுக்கான எமது அதிகரித்த செலவினங்களில் இது தெளிவாகிறது. இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு சாத்தியமான அதிகபட்ச அளவிற்கு, 2025 ஜூலை முதல் சிரேஷ்ட பிரசைகளுக்கான வட்டி மானியத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளோம். கடந்த காலங்களில் வழக்கமாக இந்த வரவுசெலவுத்திட்டத்தில் துஷ்பிரயோகத்தைத் தடுக்க வலுவானதொரு பொறிமுறையை செயற்படுத்தவும் நாம் உறுதிபூண்டுள்ளோம். இந்த வரவு செலவுத்திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% ஒதுக்கியுள்ளோம். இது பொருளாதார வளர்ச்சியை முன்னகர்த்துவதற்கான அரசாங்கத்தின் முக்கிய பங்களிப்பாகும். சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்றுறையை ஊக்குவித்தல், பொதுப் போக்குவரத்து, கிராமப்புற அபிவிருத்தி, விவசாய புத்தெழுச்சி, உள்ளூர் தொழில்முனைவு, ஆராய்ச்சியினை வணிகமயமாக்கல் மற்றும் தடையற்ற உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி ஆகியவற்றிற்கும் வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ள. இவை அனைத்திலும் மற்றும் பிற பொதுச் செலவினங்களிலும், முன்னுரிமை அளித்தல், இலக்கு வைத்தல், திறம்பட செயற்படுத்துதல் மற்றும் பணத்திற்கான மதிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் நாம் அதிகளவு எச்சரிக்கையுடன் செயல்படுவோம் எனவே, பொதுமக்களிடமிருந்து செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் பொருளாதார மற்றும் சமூக பிரதிபலன்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மீட்சிக்கான இந்தப் பயணத்தினை நாம் தொடரும்போது, மேலும் அதிக அரசிறை வாய்ப்புகள் உருவாக்கப்படும். செயற்திறன் அதிகரிப்பு வீண்விரயங்களையும் ஊழலையும் ஒழித்தல், சிறந்த முன்னுரிமை மற்றும் சிறந்த வரி நிர்வாகம் மூலம் உருவாகும் சேமிப்புக்களினால், மக்களின் முன்னுரிமைகளை நிறைவேற்ற, எமக்கு அதிக வளங்கள் கிடைக்கும். எனவே, ஒரு நாடாக நாம் பொறுமை காத்து, கூட்டாக ஒழுக்கத்துடனும் உறுதியுடனும் செயற்பட்டு நாம் முன்னோக்கிச் செல்லும் போது பிரதிபலன்கள் கிட்டும்.
2025 வரவு – செலவுத் திட்ட கோட்பாடுகள்
வரவு செலவுத் திட்டம் என்பது வரவிருக்கும் ஆண்டிற்கான வருமானம் மற்றும் செலவின முன்மொழிவுகளின் தொகுப்பு மட்டுமல்லாது, பொருளாதார முகாமைத்துவம் மற்றும் ஒட்டுமொத்த கொள்கைக்கான அரசாங்கத்தின் அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும். இந்த வரவுசெலவுத்திட்டமானது, பொருளாதாரக் கொள்கை நோக்கங்களின் வழங்கல் பக்கத்தின் மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடங்கியுள்ளது.
i. பொருட்கள், சேவைகள் மற்றும் விவசாய உற்பத்தியின் விரிவாக்கம்.
ii. இந்த உற்பத்தி அனைத்து மக்களின் தீவிர ஈடுபாடு மற்றும் பங்கேற்புடன் நடைபெற வேண்டும்.
iii. இந்த உற்பத்தியின் பயன்களும் ஆதாயங்களும் சமூகம் முழுவதும் சமமாகப் பகிரப்பட வேண்டும்.
இதேபோல், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்விப் பக்கத்தில், அரசாங்கத்தின் கொள்கை நோக்கங்கள்;
i. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்தல்.
ii. அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகள் உண்மையான மற்றும் நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும்.
iii. பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க தரத்தில் இருக்க வேண்டும்.
இந்த வழங்கல் மற்றும் கேள்வி நோக்கங்களை அடைவதற்கான வழிமுறையானது பின்வருவனவற்றின் இணைப்பாக இருக்கும் ;
i. போட்டித் தன்மையினை சந்தையில், கேள்வி, நிரம்பல் மற்றும் விலைகள் ஆகியன போட்டித்தன்மையான சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
ii. அரசாங்கம் ஒழுங்குபடுத்தல் நிறுவனங்கள் மூலம் சந்தைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணித்தல் வேண்டும்.
iii. கேள்வி மற்றும் நிரம்பலில் அரசாங்கத்தின் தீவிர பங்கேற்பு.
iv. குறிப்பிட்ட துறைகளில் உற்பத்தியினை ஒருங்கிணைத்தல்.
இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டம் இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மக்களும் ஈடுபாட்டுடன் கூடிய பங்கேற்பாளர்களாக, பங்குதாரர்களாக மற்றும் பயனாளிகளாக இருப்பார்கள். ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்க நாம் விரும்புகிறோம். அத்தகைய பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதை எளிதாக்குவதும், மக்கள் தங்கள் பொருளாதார திறனை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை நீக்குவதும் அரசாங்கத்தின் பணியாகும். தொலைதூரப் பகுதியில் வசிப்பதால் ஒருவர் தனது பொருளாதார திறனை நிறைவேற்ற முடியாமல் போனால் அது அநீதியாகும். ஒரு நபர் தனது இயலாமை, கல்வி வாய்ப்பு இல்லாமை, அடிப்படை உட்கட்டமைப்பு இல்லாமை காரணமாக தனது பொருளாதார ஆற்றலை நிறைவேற்ற முடியாமல் போனால் அது அநீதியாகும். இது ஒரு எளிதான செயல்முறை அல்ல, இதை ஒரே இரவில் செயல்படுத்த முடியாது. குடிமக்கள் தங்கள் பொருளாதார ஆற்றலை அடைய வலுவூட்டுவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. கல்வி மற்றும் பயிற்சியில் முதலீடு செய்வதன் மூலம் மக்களின் தேவையான திறன்கள் மற்றும் இயலுமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். மக்கள் தங்கள் திறன்களை அடைய வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதாரப் பராமரிப்புத் துறையில் முதலீடு செய்தல். இலங்கையிலும் வெளிநாட்டிலும் சந்தைகளை அணுகவும் பொருளாதார வாய்ப்புகளில் ஈடுபடவும் மக்களுக்கு உதவும் வகையில் உட்கட்டமைப்பை வழங்குதல். போட்டி நியாயமானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – அங்கு சமமற்ற ஆடு களத்தை உருவாக்கும் சந்தை சக்தியின் அதிகப்படியான செறிவு இருக்காது. இந்த வரவுசெலவுத் திட்டத்திலுள்ள முன்மொழிவுகள், இந்த நாட்டு மக்களின் பொருளாதார வலுவூட்டல் செயல்முறையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது இலங்கைப் பொருளாதாரத்தின் சனநாயகத்திற்கு அடித்தளமாக இருக்கும்.
நாட்டின் எதிர்கால வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவத்துக்கு உதவும் ஏற்றுமதிகள் மற்றும் கடன் அல்லாத பிற உள்வரவுகளாலும் பொருளாதார வளர்ச்சி செயற்படுத்தப்படல் வேண்டும். தொடர்ச்சியான உற்பத்தித்திறன் வளர்ச்சியாலும் வளர்ச்சி செயற்படுத்தப்படல்இயக்கப்படல் வேண்டும். மேலும் பொருளாதாரத்தின் டிஜிட்டல் மயமாக்கல் இதன் ஒரு முக்கிய அங்கமாகும். அரசாங்கத்தின் வளர்ச்சி உத்தி இந்த அடித்தளங்களால் இயக்கப்படுகிறது – வளர்ச்சி உற்பத்தித்திறன் மேம்பாடுகளால் இயக்கப்பட வேண்டும், மேலும் அது உள்ளடக்கியதாகவும், ஏற்றுமதி சார்ந்ததாகவும், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
அதேபோல் சமூக மேம்பாடு மற்றும் அரசியல் சீர்திருத்தமும், நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நீக்குதல் பொருளாதார முன்னேற்றத்திற்கான மற்றொரு முக்கியமான அடித்தளமாகும். நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளாகும். அரசாங்கத்தின் பிரதானமான தூய்மையான இலங்கை முயற்சி (Clean Sri Lanka), சமூகத்தின் இந்த அபிலாஷைக்கு உயிர் கொடுக்க தேவையான சமூக மாற்றம் மற்றும் நிர்வாக மாற்றத்தின் வடிவமாகும்.
நடுத்தர கால பேரண்ட பொருளாதார போக்கு
இவ் வரவுசெலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளூடாக பேரண்டப்பொருளாதாரப் பயணப் பாதையில் புதிய முன்னுதாரனத்துக்கான அடித்தளத்தினை அமைக்கின்றோம். நடுத்தர காலத்தில் 5 சதவீதம் மெய் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கின்றோம். பொருளாதாரத்தில் வழங்கல் இயலளவினை மேம்படுத்துவதற்காக எமது வழிமுறைகளூடாக விலையதிர்வுகள் குறைக்கப்படுதல் மூலம் குறைந்த மற்றும் ஸ்திரமான பணவீக்கத்திற்கு மேலும் ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம். எமது ஒழுக்காறுமிக்க பேரண்டப்பொருளாதாரக் கொள்கைப் பாதை உறுதியான வெளிநாட்டு கணக்கு மீதிக்கு ஆதரவாகவிருந்து பாரிய நடைமுறைக்கணக்கு பற்றாக்குறையினைக் கொண்ட தசாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும். அதற்கமைய சந்தை அடிப்படையாகக் கொண்ட நாணயம் கணிசமான தலம்பலைக் கொண்ட உத்திகளையும் இனிமேலும் எதிர்கொள்ளாது.
வலுவான ஏற்றுமதித் துறையொன்றினால் வளர்ச்சிக்கு வசதியளிக்கப்பட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 2025 இல் ஐக்கிய அமெரிக்க டொலர் 19 பில்லியனுக்கு அண்மித்த ஒருபோதும் இல்லாத உயர்வினை அடையுமென நாம் எதிர்பார்க்கின்றோம். படுகடனைத் தோற்றுவிக்காத உட்பாய்ச்சலுக்கான இவ் வளர்ச்சி ஆற்றல் வாய்ந்த பொருளாதார வளர்ச்சியுடனும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 2.3 சதவீதம் கொண்ட ஆரம்ப வரவு செலவுத்திட்ட மிகையுடனும் இணைந்து 2028 தொடக்கம் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் படிப்படியான அதிகரிப்பை நிறைவேற்றுவதற்கு இலங்கை நன்கு தயாராகவுள்ளது என்பதை உறுதி செய்யும்.
உலக வங்கி மதிப்பீடுகளின் பிரகாரம் நாட்டின் வறுமை வீதம் 2023 இல் 25.9 சதவீதத்தையெட்டியுள்ளது. நாட்டுக்கான கடன்களைச் செலுத்துவதில் தவணை தவறியிருந்த அநேகமான நாடுகள் நீண்டகாலப்பகுதிக்கு உயர்வான வறுமையினை அனுபவித்திருந்தன. எவ்வறாயினும், எமது நாட்டில் இப்போக்கானது 2025 அளவில் தலைகீழாக மாற்றமடையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். தொடர்ந்து வறுமையானது குறைவடைந்து சென்று இவ் வரவுசெலவுத் திட்டத்தின் முன் மொழிவுகளானது சமூகத்தில் வரியவர்கள் மற்றும் மிகவும் வலுவற்ற உறுப்பினர்களை வலுப்படுத்துவதற்கான முழுமையான முதற்படியாகும்.
கண்டிப்பான அரசிறை ஒழுக்காறு மற்றும் முன்மதி, ஆற்றல்வாய்ந்த நாணய முகாமைத்துவம், பொறுப்புமிக்க படுகடன் முகாமைத்துவம், மனித மூலதன முதலீடு, வலிமையான சமூக பாதுகாப்பு வலை, பொருளாதார பண்முகப்படுத்தல், ஏற்றுமதி ஊக்குவிப்பு, சூழலை மேம்படுத்தல், விவசாய நவீனமயமாக்கல் பசுமைப் பொருளாதார கொள்கைகள், புத்தாக்கம், டிஜிட்டல் மயமாக்கல், தொழில்தொடக்க சூழல் அமைப்புகள், அரசாங்க – தனியார் பங்குடமைகள், ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை வலிமைப்படுத்தல், ஆளுகை மேம்பாடு மற்றும் வெளிப்படைத் தன்மையினை ஊக்குவித்தல், நிலைபேறான வளர்ச்சி உபாயங்கள் என்பவற்றை முன்னுரிமைப்படுத்துவதன் மூலம் நீண்டகால பொருளாதார உறுதிப்பாட்டையும் சுபீட்சத்தையும் எய்துவதற்கு இலங்கையின் பொருளாதாரத்தில் நிலை மாறுதல்மிக்க மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு நெருக்கடிக்குப் பிந்திய வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்.
தொடர்ந்து 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
1. பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி விரிவாக்கல்
இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் திறனை அதிகரிப்பதன் மூலம், இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை குறிப்பிட்டதொரு அளவுக்கு அதிகரிக்கும் நோக்கில், அரசாங்கம் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை (2025-2029) உருவாக்கும். புதிய ஏற்றுமதி சந்தைகளைப் பயன்படுத்த, ஏற்கனவே உள்ள சந்தைகளை விரிவுபடுத்துவதற்கு அல்லது பெரிய அளவிலான ஏற்றுமதியாளர்களின் பெறுமதிச் சங்கிலி மற்றும் உலகளாவிய பெறுமதிச் சங்கிலிகளுடன் இணைப்பதற்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு வசதி செய்யப்படும்.
உயர்தர, மலிவு விலை மூலப்பொருட்களை அணுகுவதில் உள்ள வரையறைகளை நீக்கும் நோக்கில், தேசிய தீர்வைக் கொள்கை திருத்தப்பட்டு, எளிய, வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய தீர்வைக் கட்டமைப்பை உருவாக்க, துணை தீர்வைகள் மற்றும் விலக்குகளை படிப்படியாக பகுத்தறிவு செய்வதற்கான கட்டமைப்பைக் கொண்ட ஒரு புதிய தீர்வைக் கொள்கை உருவாக்கப்படும்.
உபாய ரீதியான பங்காளர்களுடன், குறிப்பாக பிராந்திய பொருளாதார பங்குடமை மற்றும் வேறு உடன்படிக்கைகளினூடாக, ஆசியான் நாடுகளுடனான பாரிய பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கையின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் வலையமைப்பை விரிவுபடுத்தல் வேண்டும்.
இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக இலங்கையின் இராஜதந்திரப் பணிகளின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை முயற்சிகளுடன் பொருளாதார இராஜதந்திரத்தில் மேம்பட்ட கவனம் செலுத்தப்படும்.
வெளிநாட்டு வியாபார வலையமைப்புகள், வர்த்தக ரீதியான வாய்ப்புகள் மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தக ரீதியான கூட்டுமுயற்சிகள் என்பவற்றுக்கு அதிகரித்த அணுகலுக்காக வெளிநாட்டு வாழ் இலங்கையரிடம் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும்.
வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளரத்தை செயல்படுத்துவதன் ஊடாக சுங்கம் மற்றும் குடிவரவு ஆகிய முக்கிய எல்லை முகவர்களை தானியங்குபடுத்தி ஒருங்கிணைத்தல் மற்றும் ஏற்றுமதியாளர் பதிவை டிஜிட்டல் மயப்படுத்தல்.
வர்த்தக வசதி மற்றும் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதற்கு புதிய சுங்க கட்டளைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அதிக வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுடன் கூடிய நாடுகளுக்கு முன்னுரிமையளித்து, ஏற்கனவே காணப்படுகின்ற 44 இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்களுக்கு அப்பால் இலங்கையின் இரட்டை வரி விதிப்பனவு மற்றும் வரி ஏய்ப்பு ஒப்பந்தங்கள் விரிவுபடுத்தப்படும்.
2. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதியளிப்பு
ஏற்றுமதி சார்ந்த முதலீடுகள் மற்றும் துறை சார்ந்த வலயங்களை விரிவுபடுத்துதல். நிலையான நடைமுறைகள், வள முகாமைத்துவம் மற்றும் பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் சுற்றுச்சூழல்-தொழில்துறை பூங்காக்களை நிறுவுவதற்கு அரச தனியார் பங்களிப்புகள் மற்றும் தனியாரினால் நடத்தப்படும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் மூலம் முன்னுரிமை அளிக்கப்படும்.
பொருளாதார உருமாற்ற சட்டத்தை மாறிவரும் முன்னேற்றங்களுக்கு பொருந்தும் வகையில் உரிய திருத்தங்களுடன் மீளாய்வு செய்யும்.
அரசாங்கம் பயன்படுத்தப்படாத அரசுக்கு சொந்தமான காணிகளை உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படும்.
வளர்ந்து வரும் அபிவிருத்திற்கேற்ப பொருத்தமான திருத்தங்களுடன் பொருளாதார கொடுக்கல் வாங்கல் சட்டம் மீண்டும் திருத்தம் செய்யப்படும்.
முதலீடுகளை பாதுகாப்பதற்காக பிரத்தியேகமான முதலீட்டுப் பாதுகாப்பு சட்ட மூலமொன்று இயற்றப்படும்.
ஆதனங்களை பதிவுசெய்தல், வரிக் கொடுப்பனவுகளை