Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயன்றவர்கள் கைது!

இந்தப் பயணத்திற்காக தரகர்களுக்கு 4.5 மில்லியன் ரூபா பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

குறித்த நபர்கள் மாலை 6.40 மணியளவில் துபாய்க்குப் புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL-225 ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர்கள் துபாய்க்கு சென்று, அங்கிருந்து கனடாவின் டொராண்டோவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டநபர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் அவர்களை இறக்கிவிட வந்து விமான நிலைய புறப்பாடு முனையத்தில் காத்திருந்த தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தரகரைத் தவிர, மற்றொரு தரகர் நாட்டிற்குள் இருந்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தேவையான அனைத்து போலி ஆவணங்களையும் தயாரித்துள்ளார்.

மேலும் கனடாவில் அவர்களுக்கு உதவி செய்து வரும் மற்றொரு தரகர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் ஒவ்வொரு நபரும் ஒரு மில்லியன் ரூபா செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பயணத்திற்காக தரகர்களுக்கு 4.5 மில்லியன் ரூபா பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்திற்காகப் புறப்படுவதற்காக அவர்கள் அனைவரும் கடந்த 17 ஆம் திகதி முதல் மினுவாங்கொடை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குழுவினரை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.